என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே பஸ் மோதி விவசாயி பலி: போலீசார் விசாரணை
சிவகங்கை அருகே பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள சின்னப்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60), விவசாயி. இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கைக்கு வந்த தனியார் பஸ் ஆறு முகம் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அதே இடத்தில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story






