என் மலர்

    செய்திகள்

    கவுரவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்: ஐகோர்ட்டு
    X

    கவுரவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்: ஐகோர்ட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கவுரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வரவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள், தங்களது அரசியல் சுயநலத்திற்காக கவுரவக் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளில, கலப்பு திருமணம் செய்த 81 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே தமிழகத்தில் நடைபெறும் கவுரவக் கொலைகளை தடுக்க புதிதாக சட்டம் இயற்றவும், எஸ்.சி. பிரிவு மக்களுக்கு தற்காப்புக்காக ஆயுதங்கள் வழங்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கலப்பு திருமணம் செய்துக்கொள்ளும் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் வன்முறை நடைபெறும் மாவட்டங்களில், இதுபோன்ற சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறையில் சிறப்பு தனிப்படையை உருவாக்கவேண்டும். அந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு, எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், ‘கவுரவக் கொலையை தடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அனைத்து மாநில அரசுகளின் கருத்தை கேட்டு விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளடர், ‘கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த இரண்டு வாரம் காலஅவகாசம் வேண்டும் என்று கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘கவுரவக் கொலை குறித்து மத்திய அரசு தனிச் சட்டத்தை விரைவாக இயற்றும் என்பதை நம்புகிறோம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×