என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்
Byமாலை மலர்16 Dec 2016 3:12 AM GMT (Updated: 16 Dec 2016 3:12 AM GMT)
வார்தா புயல் வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக நிலைகொண்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
வங்க கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12-ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயல் படிப்படியாக வலுவிழந்து உள்ளது. இப்போது மீண்டும் மருதா என்ற புயல் வங்க கடலில் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வார்தா புயல் படிப்படியாக வலுவிழந்து, தமிழகத்தைவிட்டு சென்றுவிட்டது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு புயல் எதுவும் உருவாகும் நிலையில் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், குன்னூரில் 10 செ.மீ., தாராபுரம் 5 செ.மீ., கேத்தி 2 செ.மீ., பெரியநாயக்கன்பாளையம், சிவகிரி, குந்தாபாலம், வால்பாறை, ஊட்டி, பீளமேடு, போளூர், கோவை தெற்கு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.
வங்க கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12-ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயல் படிப்படியாக வலுவிழந்து உள்ளது. இப்போது மீண்டும் மருதா என்ற புயல் வங்க கடலில் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வார்தா புயல் படிப்படியாக வலுவிழந்து, தமிழகத்தைவிட்டு சென்றுவிட்டது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு புயல் எதுவும் உருவாகும் நிலையில் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், குன்னூரில் 10 செ.மீ., தாராபுரம் 5 செ.மீ., கேத்தி 2 செ.மீ., பெரியநாயக்கன்பாளையம், சிவகிரி, குந்தாபாலம், வால்பாறை, ஊட்டி, பீளமேடு, போளூர், கோவை தெற்கு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X