என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
Byமாலை மலர்15 Dec 2016 5:58 PM GMT (Updated: 15 Dec 2016 7:11 PM GMT)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் கடந்த டிசம்பர் 7-ம் தேதி கருணாநிதி வீடு திரும்பி இருந்தார். பின்னர் வீட்டில் இருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சளித் தொல்லை காரணமாக மீண்டும் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் கடந்த டிசம்பர் 7-ம் தேதி கருணாநிதி வீடு திரும்பி இருந்தார். பின்னர் வீட்டில் இருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சளித் தொல்லை காரணமாக மீண்டும் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X