search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்
    X

    தஞ்சையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    பி.எஸ்.என்.எல். செல்போன் டவர்களை தனியார் செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    பி.எஸ்.என்.எல். செல்போன் டவர்களை தனியார் செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை பி.எஸ்.என்.எல். நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 350 பேர் இன்று வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக பணிகள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டது. அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.

    Next Story
    ×