என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே காதல் தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்15 Dec 2016 12:11 PM GMT (Updated: 15 Dec 2016 12:11 PM GMT)
ராஜபாளையம் அருகே காதல் தகராறில் 2 பேரை கத்தியால் குத்திய இளம்பெண்ணின் தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). இவரது மகளை அந்த பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த ஊரை சேர்ந்த இசக்கிராஜ் (26) என்பவர் உடந்தையாக இருந்ததாக மாடசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாடசாமிக்கும், இசக்கிமுத்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இசக்கிராஜ், அவரது சகோதரர் காளிராஜ் ஆகிய 2 பேரும் மாடசாமி வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து 2 பேரையும் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.
படுகாயம் அடைந்த இசக்கிராஜ், காளிராஜ் ஆகியோர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாடசாமியை தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). இவரது மகளை அந்த பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த ஊரை சேர்ந்த இசக்கிராஜ் (26) என்பவர் உடந்தையாக இருந்ததாக மாடசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாடசாமிக்கும், இசக்கிமுத்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இசக்கிராஜ், அவரது சகோதரர் காளிராஜ் ஆகிய 2 பேரும் மாடசாமி வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து 2 பேரையும் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.
படுகாயம் அடைந்த இசக்கிராஜ், காளிராஜ் ஆகியோர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாடசாமியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X