என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கம்பம் - குமுளி மலைச்சாலையில் ஒருவழிப்பாதை நாளை முதல் அமல்
Byமாலை மலர்15 Dec 2016 10:24 AM GMT (Updated: 15 Dec 2016 10:25 AM GMT)
கம்பம் - குமுளி மலைச்சாலையில் நாளை முதல் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வருகிறது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் அதிகளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனவே கம்பம், கூடலூர், குமுளி வழிச்சாலையில் வாகனங்கள் முந்தி செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும்.
எனவே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கடந்த சில வருடங்களாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் கம்பம் தபால் அலுவலகம் அருகே திருப்பி விடப்பட்டு கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்லும்.
அதே போல் சபரிமலையில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் குமுளி மலைச்சாலை வழியாக கூடலூர், கம்பம் வரும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வருகிறது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் அதிகளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனவே கம்பம், கூடலூர், குமுளி வழிச்சாலையில் வாகனங்கள் முந்தி செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும்.
எனவே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கடந்த சில வருடங்களாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் கம்பம் தபால் அலுவலகம் அருகே திருப்பி விடப்பட்டு கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்லும்.
அதே போல் சபரிமலையில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் குமுளி மலைச்சாலை வழியாக கூடலூர், கம்பம் வரும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X