என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்15 Dec 2016 10:21 AM GMT (Updated: 15 Dec 2016 10:22 AM GMT)
திருவெண்ணைநல்லூர் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஆந்திர மாநிலத்லை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பஸ் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் விவேகானந்தன் ஓட்டிச்சென்றார்.
அப்போது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ்மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா(வயது 24), ஐதராபாத்தை சேர்ந்த சரண்(27) மற்றும் விவேகானந்தன் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
விபத்து பற்றி அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சாய்கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பஸ் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் விவேகானந்தன் ஓட்டிச்சென்றார்.
அப்போது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ்மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா(வயது 24), ஐதராபாத்தை சேர்ந்த சரண்(27) மற்றும் விவேகானந்தன் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
விபத்து பற்றி அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சாய்கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X