என் மலர்
செய்திகள்

கார்த்திகை தீபம் பற்ற வைத்த மூதாட்டி தீயில் கருகி பலி
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள கணக்கம் பாளையம் என்றஇடத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி நாச்சம்மாள் (வயது 82)
செல்லமுத்து இறந்து விட்டதால் நாச்சம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் என்பதால் தனது வீட்டின் முன்பு கார்த்திகை விளக்கு வைக்க அவர் எண்ணினார்.
இதனால் கார்த்திகை விளக்கில் எண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாகஅவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது. இதனால் உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. வேதனை பொறுக்க முடியாமல் நாச்சம்மாள் அலறினார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாச்சம்மாள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதன் பிறகு கவலைக்கிடமாக இருந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நாச்சம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.






