என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு, மகாலட்சுமி நகரில் 100 வீடுகளை மழை வெள்ளம்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீஞ்சல்மடு கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கால்வாய் நிரம்பியதால் மழை வெள்ளம் அருகில் உள்ள மகாலட்சுமி நகருக்குள் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
கால்வாயை ஒட்டி உள்ள வீடுகள் முதல் தளம் வரை தண்ணீரில் மூழ்கி உள்ளன. அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு திம்மாவரத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதி செய்யப்பட்டு உள்ளது.
மகாலட்சுமி நகரை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து தண்ணீர் தேங்கிநிற்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மகாலட்சுமி நகரில் பொது மக்கள் அனைவரும் வெளியேறி உள்ளதால் வீடுகளில் கொள்ளையை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டில் மின் தடை நீடித்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
உடைந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.






