என் மலர்
செய்திகள்

திருப்புவனம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் கடும் அவதி
திருப்புவனம் பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பெண்கள் குடத்துடன் வீதி வீதியாக அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருப்புவனம்:
திருப்புவனம் பேரூராட்சியைச் சேர்ந்தது 16, 17 வது வார்டுகள் இந்த வார்டுகளுக்கு தண்ணீர் மோட்டார் இயங்காததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பெண்கள் குடத்துடன் கொளுத்தும் வெயிலில் அலைந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
பேரூராட்சி அதிகாரியை பார்க்கச் சென்றால் அதிகாரிகளை பார்க்க முடியாமல் பெரும் அவதியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மோட்டாரை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என 16, 17-வது வார்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருப்புவனத்திலிருந்து மதுரைக்கு சுமார் 5 லட்சம் லிட்டரும், அருப்புக்கோட்டை பேரூராட்சிக்கு தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






