என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் குழந்தைக்கு பால் காய்ச்சிய இளம்பெண் தீயில் கருகி பலி
ஈரோடு:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அலிராஜா (வயது25). இவரது மனைவி குளோப்ஷாசாத்துன் (22). இவர்களுக்கு 2 வயதில் ஐந்தர் அலி என்ற மகன் உள்ளார்.
முகமதுஅலிராஜா குடும்பத்துடன் ஈரோடு கருங்கல் பாளையத்தில் வசித்து வருகிறார். கணவன்- மனைவி இருவரும் அங்கு உள்ள பிளாஸ்டிக் பேப்பர் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் முகமதுஅலிராஜாவின் மகன் பசியால் அழுதுள்ளான். இதனால் மகனுக்கு பால் காய்ச்ச குளோப்ஷாசாத்துன் எழுந்து ஸ்டைவ்வை பற்ற வைத்து பால்காய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத வகையில் அவர் அணிந்திருந்த பர்தா மீது தீப்பிடித்தது. இதனால் அவர் அலறினார். மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு முகமதுஅலிராஜா திடுக்கிட்டு எழுந்து மனைவியை காப்பாற்ற ஓடி வந்தார்.
இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கணவன்-மனைவி இருவரையும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி குளேபர்ஷாசாத்துன் இன்று காலை பரிதா பமாக இறந்தார். முகமது அலிராஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






