என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி
    X

    சென்னிமலை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி

    தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் விளைந்து என்ன லாபம்...? விலை இல்லையே காய் பறிக்கும் கூலி கூட இல்லை என புலம்புகின்றனர்.

    சென்னிமலை:

    தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் விளைந்து என்ன லாபம்...? விலை இல்லையே காய் பறிக்கும் கூலி கூட இல்லை என புலம்புகின்றனர்.

    சென்னிமலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடந்த வாரச் சந்தையில் தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தது இதன் விலை கடுமையாக சரிந்து விட்டது கடந்த வாரம் ரூ.400-க்கு விற்ற பெட்டி நேற்று ரூ.120-க்கு தான் விலை போனது. இந்த விலை குறைவால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், விளைச்சல் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் சந்தைக்கு வரத்து கூடியுள்ளது. காய் பறிக்கும் செலவே கிடைக்காது என புலம்பினர். சில்லறை விற்பனையில் தாக்காளி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்தனர். பீர்க்கங்காய் கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது. கத்தரி வரத்து மிக குறைவாக இருந்ததால் விலை ரூ40-ல் இருந்து ரூ.60-க்கு எகிறியது.

    Next Story
    ×