என் மலர்
செய்திகள்

கோபி அருகே அரசு பெண் ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு
கோபி அருகே அரசு பெண் ஊழியரிடம் 10 பவுன் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி லதா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். லதா ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் இளநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் தினமும் காலை கோபியில் இருந்து ஈரோட்டில் பஸ்சில் சென்று இரவு வீடு திரும்புவது வழக்கம்.
இதே போன்று நேற்று இரவும் லதா வேலையை முடித்து கொண்டு ஈரோட்டில் இருந்து கோபிக்கு பஸ்சில் எல்.கள்ளிப்பட்டி பஸ் நிறுத்ததில் இறங்கினார். தனது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். ஒருவன் வண்டியை ஓட்ட மற்றொருவன் பின்னால் உட்கார்ந்தபடி வந்தான். திடீரென லதா மீது மோதுவது போல் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.
இதில் லதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது மகள் திருடன்...திருடன்...என்று கூச்சலிட்டார். ஆனால் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. வழிப்பறி கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் காயம் அடைந்ததால் லதா கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி லதா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். லதா ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் இளநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் தினமும் காலை கோபியில் இருந்து ஈரோட்டில் பஸ்சில் சென்று இரவு வீடு திரும்புவது வழக்கம்.
இதே போன்று நேற்று இரவும் லதா வேலையை முடித்து கொண்டு ஈரோட்டில் இருந்து கோபிக்கு பஸ்சில் எல்.கள்ளிப்பட்டி பஸ் நிறுத்ததில் இறங்கினார். தனது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். ஒருவன் வண்டியை ஓட்ட மற்றொருவன் பின்னால் உட்கார்ந்தபடி வந்தான். திடீரென லதா மீது மோதுவது போல் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.
இதில் லதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது மகள் திருடன்...திருடன்...என்று கூச்சலிட்டார். ஆனால் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. வழிப்பறி கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் காயம் அடைந்ததால் லதா கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






