என் மலர்
செய்திகள்

பொறையாறு அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
பொறையாறு அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் பொறையாறு இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையிலான போலீசார் தில்லையாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 96 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மதுபாட்டில்கள் மற்றும் கடத்திவந்த சீர்காழி கேவரோடையை சேர்ந்த சுரேஷ், வெள்ளக்குளத்தை சேர்ந்த குபேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story






