search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலத்தில் டயரை ஏற்ற பஸ்சில் ஏறியவர் தவறி விழுந்து பலி
    X

    சத்தியமங்கலத்தில் டயரை ஏற்ற பஸ்சில் ஏறியவர் தவறி விழுந்து பலி

    சத்தியமங்கலத்தில் டயரை ஏற்ற பஸ்சில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    சத்தியமங்கலத்தில் உள்ள ஜல்லி குழி என்ற இடத்தை சேர்ந்தவர் முத்து (வயது 44). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ஒருதனியார் பஸ்சின் மேல் டயரை ஏற்றி கொண்டு இருந்தார்.

    இதற்காக முத்து பஸ்சின் பின்புறம் உள்ள ஏணிப்படி வழியாக ஏறினார். அப்போது மழை தூறி கொண்டு இருந்தது. இதனால் கால் வழுக்கிய அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த அடிபட்ட முத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டடார். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த முத்துவுக்கு கலாமணி என்ற மனைவியும் மேகலா (19), நிவேதா (18) என்ற 2 மகளும் உள்ளனர். இவர்கள் முத்துவின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
    Next Story
    ×