search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவான ‘நடா’ புயல் கடலூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் ‘நடா’ புயல் கடந்த 2-ந் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    எனவே கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுகின்றன.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    * * * கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    Next Story
    ×