search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டவாளம் மாற்று பணியால் வைகை எக்ஸ்பிரஸ் தாமதம்
    X

    தண்டவாளம் மாற்று பணியால் வைகை எக்ஸ்பிரஸ் தாமதம்

    செந்துறை அருகே உள்ள மாத்தூர் தண்டவாளம் மாற்றுப் பணியால் வைகை எக்ஸ்பிரஸ் தாமதாக சென்றது.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள மாத்தூர் தண்டவாளம் மாற்றுப் பணியால் வைகை எக்ஸ்பிரஸ் தாமதாக சென்றது.

    வாளாடி முதல் ஆர்.எஸ் மாத்தூர் வரை இருவழிப்பாதைகள் பணிகள் முடிந்ததால் ரயில்கள் இருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருத்தாசலம் முதல் அரியலூர் வரையிலான பாதையில் தண்டவாளம் மாற்றி புது தண்டவாளம் அமைக்கு பணி இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று மாலை ஆர்.எஸ் மாத்தூர் செந்துறை இடையே இப்பணி நடைபெற்றதால் நேற்று மாலை 5 மணிக்கு ஆர்.எஸ் மாத்தூர் வந்தடைந்த சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கழிந்து 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    இதனால் ரயில் பயணிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் 5.45 மணிக்கு வர வேண்டிய திருச்சி-கடலூர் பயணிகள் ரயிலும் 45 நிமிடங்கள் தாமதாக வந்தது.
    Next Story
    ×