என் மலர்
செய்திகள்

கோபி அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
கோபி அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அடுத்த கள்ளிபட்டி சி.சி.கே.நகர் டேங் வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது49). தொழிலாளி. இவரது மனைவி பார்வதி.இவர்களுக்கு ஒரு மகள் இருந்துள்ளார்.
அவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதில் இருந்து வெங்கடாச்சலம் மகள் நினைப்பாகவே இருந்துள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.
சம்பவத்தன்று வெங்கடாச்சலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாச்சலம் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






