search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, டிச. 3-

    ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் ஹபிபுல்லா (வயது 62).

    இவர் சம்பவத்தன்று வீட்டு அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வகையில் ஹபிபுல்லா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப் பட்டு அவர் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஹபிபுல்லா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×