என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளகோவில் அருகே விபத்து: மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பலி
    X

    வெள்ளகோவில் அருகே விபத்து: மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பலி

    வெள்ளகோவில் அருகே விபத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    வெள்ளகோவில் சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 38). இவர் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தாராபுரம் கிளையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தாராபுரத்துக்கு வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் அருகே வந்த போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பார்த்திபன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த பார்த்திபனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×