என் மலர்
செய்திகள்

மணல் கடத்தலை தடுத்த போது மாட்டு வண்டியை ஏற்றி கிராம உதவியாளர் கொலை
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மாட்டு வண்டி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த பழவேலி, திம்மாவரம், மனப்பாக்கம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் மணல் கடத்தும் சம்பவம் குறையவில்லை. மாட்டு வண்டிகள், வாகனங்கள் மூலம் பாலாற்றில் மணல் அள்ளும் சம்பவம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாலூரை அடுத்த உள்ளாளூர் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக உதவியாளர் மணிக்கு தகவல் கிடைத்தது.
அவர் வி.ஏ.ஓ. மற்றும் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துவிட்டு மணல் கடத்தலை கண்காணிக்க தனியாக சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருடி வந்தனர்.
உடனே மணி அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் மணல் கடத்தல்காரர்கள் மாட்டு வண்டியை நிறுத்தாமல் மணி மீது மோதி ஓட்டிச் சென்றனர். இதில் மாட்டு வண்டி சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணி பலியானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்ததும் பாலூர் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென அவர்கள் காஞ்சீபுரம்- செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மாட்டு வண்டி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டை அடுத்த பழவேலி, திம்மாவரம், மனப்பாக்கம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் மணல் கடத்தும் சம்பவம் குறையவில்லை. மாட்டு வண்டிகள், வாகனங்கள் மூலம் பாலாற்றில் மணல் அள்ளும் சம்பவம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாலூரை அடுத்த உள்ளாளூர் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக உதவியாளர் மணிக்கு தகவல் கிடைத்தது.
அவர் வி.ஏ.ஓ. மற்றும் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துவிட்டு மணல் கடத்தலை கண்காணிக்க தனியாக சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருடி வந்தனர்.
உடனே மணி அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் மணல் கடத்தல்காரர்கள் மாட்டு வண்டியை நிறுத்தாமல் மணி மீது மோதி ஓட்டிச் சென்றனர். இதில் மாட்டு வண்டி சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணி பலியானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்ததும் பாலூர் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென அவர்கள் காஞ்சீபுரம்- செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மாட்டு வண்டி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






