என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவான்மியூரில் விடுதலை சிறுத்தை பிரமுகரை மிரட்டி நகை-பணம் கொள்ளை
    X

    திருவான்மியூரில் விடுதலை சிறுத்தை பிரமுகரை மிரட்டி நகை-பணம் கொள்ளை

    திருவான்மியூரில் விடுதலை சிறுத்தை பிரமுகரை மிரட்டி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    திருவான்மியூர், லட்சுமி புரத்தை சேர்ந்தவர் அருண். விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். அதே பகுதியில் ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் கடை அலுவலகத்தில் தனியாக இருந்தார். மழை பெய்து கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் திடீரென கடை அலுவலகத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அருண்குமாரை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்து இருந்த 15 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்தனர்.

    மேலும் கடையில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    அருண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×