என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்-காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
    X

    கடலூர்-காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

    நடா புயல் காரணமாக கடலூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் நாளை 2-ந் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் கடலூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரத்தில் உள்ள மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×