என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் ரெயிலை மறிக்க சென்ற ஆதி தமிழர் கட்சியினர் கைது
ஈரோடு:
ஆதி தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை கைவிட வலியுறுத்தி ஈரோட்டில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவித்திருந்தனர்.
இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அதன்படி இன்று (புதன்கிழமை) காலை ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் வெண்மணி, ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் சண்முகம், துணை செயலாளர் கார்த்தி, துணைத்தலைவர் செங்கோட்டையன்.
மாவட்ட செயலாளர்கள் பழனிச்சாமி, சக்திவேல், ஆறுச்சாமி, செல்வகுமார முருகேசன் உள்பட பலர் மறியல் செய்ய ஈரோடு ரெயில் நிலையத்தில் திரண்டனர். அவர்களை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் சிறு பான்பான்மையினர் மற்றும் தலித்களின் உரிமைகள் மறுக்கப்படும் என ஆதி தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.






