என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே கடலில் கரை ஒதுங்கிய சிறுவன் பிணம்: போலீசார் விசாரணை
சீர்காழி:
சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் அருகே உள்ள மடவாமேடு கடற்கரை பகுதியில் இன்று காலை 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.
இதனை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசாருக்கும், கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த சிறுவன் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை மீன்கள் கொத்திதின்றிருப்பது தெரியவந்தது. அவனது உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? கொலை செய்யப்பட்டானா? அல்லது தற்கொலை செய்து கொண்டானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






