என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே மில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
சிவகங்கை அருகே மில்லுக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா ஒக்கூரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் அன்னத் தாய். இவரது மகள் ராதிகா (வயது33). திருமணமான இவர், மதகுபட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராதிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஆவரது தாய் மற்றும் உறவினர்கள் ராதிகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அன்னத்தாய் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை தேடி வருகிறார்.
Next Story






