என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளியில் அடி-தடி மோதல்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
    X

    அரசு பள்ளியில் அடி-தடி மோதல்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு

    திருப்புவனம் அரசு பள்ளியில் அடிதடியில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செல்வப்பாண்டி, ஆங்கில ஆசிரியர் சரவணன் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியில் இறை வணக்க நிகழ்ச்சி முடிந்து செல்கையில் மாணவர்கள் முன்னிலையில் அடி தடியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்களிடமும் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதே பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×