search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சியில் தி.மு.க.வினர் மறியல்: 30 பேர் கைது
    X

    செஞ்சியில் தி.மு.க.வினர் மறியல்: 30 பேர் கைது

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செஞ்சியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செஞ்சியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். செஞ்சி கூட்டுரோட்டில் மகளிரணியை சேர்ந்த சைதானி பீமஸ்தான் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட சைதானி பீமஸ்தான் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அழகிரிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்தி, அன்புச்செல்வன், பாஷா, சேகர் ஏழுமலை உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×