என் மலர்
செய்திகள்

கேளம்பாக்கத்தில் 100 பவுன் கொள்ளை: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
கேளம்பாக்கத்தில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணன்(வயது 57) கடந்த 26-ந் தேதி திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற அவர் நேற்று வீட்டிற்கு வந்த போது வீட்டின்கதவு திறந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் இருந்த 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளை போயிருப்பதை கண்டு உடனடியாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் வீட்டை பூட்டி சாவியை அங்கேயே மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள் சாவியை எடுத்து பூட்டைதிறந்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.
லட்சுமி நாராயணனின் அந்த வில்லாக்களை சுற்றி மின்வேலி உள்ளதால் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையமுடியாது என கூறப்படுகிறது. இதனால் தெரிந்தவர்களோ அங்கு பணியில் உள்ள காவலாளிகளுடன் தொடர்புடையவர்களோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் 3 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
அதை வைத்து தனிப்படை போலீசார் அங்குள்ள காவலாளிகளிடமும் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணன்(வயது 57) கடந்த 26-ந் தேதி திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற அவர் நேற்று வீட்டிற்கு வந்த போது வீட்டின்கதவு திறந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் இருந்த 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளை போயிருப்பதை கண்டு உடனடியாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் வீட்டை பூட்டி சாவியை அங்கேயே மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள் சாவியை எடுத்து பூட்டைதிறந்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.
லட்சுமி நாராயணனின் அந்த வில்லாக்களை சுற்றி மின்வேலி உள்ளதால் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையமுடியாது என கூறப்படுகிறது. இதனால் தெரிந்தவர்களோ அங்கு பணியில் உள்ள காவலாளிகளுடன் தொடர்புடையவர்களோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் 3 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
அதை வைத்து தனிப்படை போலீசார் அங்குள்ள காவலாளிகளிடமும் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






