என் மலர்
செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
வண்ணாரப்பேட்டையில் வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் பணம் எடுப்பதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நீண்ட நேரம் ஆகியும் பொது மக்களுக்கு பணம் விநியோகிக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் வங்கியில் பணம் இல்லை. எங்கள் வங்கிற்கு வர வேண்டிய பணமும் இன்னும் வந்து சேரவில்லை என்று கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கி முன்பு உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் என சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தண்டையார் பேட்டை போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் பணம் எடுப்பதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நீண்ட நேரம் ஆகியும் பொது மக்களுக்கு பணம் விநியோகிக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் வங்கியில் பணம் இல்லை. எங்கள் வங்கிற்கு வர வேண்டிய பணமும் இன்னும் வந்து சேரவில்லை என்று கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கி முன்பு உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் என சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தண்டையார் பேட்டை போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story