search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த மத்திய அரசை கண்டித்து கடலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த மத்திய அரசை கண்டித்து கடலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

    மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி, துரைசரவணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, நகர செயலாளர் தண்டபாணி, நகர துணை செய லாளர் ராமு, குருசரஸ்வதி, பாலகிருஷ்ணன், நிர்வாகி கள் கோவிந்தசாமி, வேல்முருகன், பொன் கணேஷ், ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன் முடி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ.சேதுநாதன், நகர செயலாளர் கபிலன் மற்றும் மாவட்ட, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அங்கையர் கண்ணி தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    உளுந்தூர்பேட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

    இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    Next Story
    ×