search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
    X

    திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்

    திருச்சியில் அடையாளம் தெரியாத 2 ஆண் பிணங்கள் கிடந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தின் அருகில் தென்னூர் இணைப்பு சாலை பகுதியில் 30 வயது ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செ‌ஷன் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை மருந்தக வளாகத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×