search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்

    கிருஷ்ணகிரி அருகே தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள ஜுஞ்சம்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா(42). இவருடைய மகள் சந்திரலேகா(20). இவர் பர்கூர் அரசு பொறியிற்கல்லூரியில் கம்பியூட்டர் சையின்ஸ் 4ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 26ம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

    இது குறித்து விஜயா கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×