என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே சூதாடிய 4 பேர் கைது
    X

    வேதாரண்யம் அருகே சூதாடிய 4 பேர் கைது

    வேதாரண்யம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் கத்தரிப்புலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கத்தரிப்புலம் தங்கம் (என்கிற) முனியப்பன் (61) என்பவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோப்பில் சிலர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    இதைப்பார்தத போலீசார் அங்கு சென்று கத்தரிப்புலத்தைச் சேர்ந்த முனியப்பன் (61), சரண்ராஜ் (28), ரத்தீஷ் (38), தமிழ்செல்வம் (55) ஆகிய நால்வரையும் பிடித்து சூதாட்ட களத்தில் கிடந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தும், வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    Next Story
    ×