என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயம்
    X

    வேதாரண்யம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயம்

    வேதாரண்யம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மகன் சேகர் (23). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரியாப்பட்டினம்- வேதாரண்யம் சாலையில் செண்பகராயநல்லூர் வளைவு அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வேதாரண்யம் பகுதியிலிருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சேகர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×