என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
காரைக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியுபரம் 9-வது வீதியை சேர்ந்தவர் ராமானுஜர். இவரது மகள் ஸ்ரீநிதி (வயது17). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
சம்பவத்தன்று விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ஸ்ரீநிதி வீட்டின் மாடியில் உள்ள அறைக்குசென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story