search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.-காங்கிரஸ்  ஆர்ப்பாட்டம்
    X

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.-காங்கிரஸ்  ஆர்ப்பாட்டம்

    ரூ.500, ரூ.1000 நோட்டு பிரச்சனை எதிரொலியால் காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.-காங்கிரஸ்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம்:

    ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொது மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். வங்கிகள் முன்பும், ஏ.டி.எம். மையங்களிலும் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.

    இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தனித்தனியாக போராட்டம் நடத்தினர்.

    காஞ்சீபுரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் பொன்மொழி, சி.வி.எம்.அ.சேகரன்,சுகுமார், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், வி.எஸ்.ராம கிருஷ்ணன், குமணன், அப்துல் மாலிக், அபுசாலி, வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மோடியை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காஞ்சீபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவு தூண் அருகே மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.குப்பன், முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், நிர்வாகிகள் அளவூர் நாகராஜன், வழக்கறிஞர் ஜீவி. மதியழகன், எஸ்.எல்.என்.எஸ். விஜயகுமார், அவளூர் சீனிவாசன், தனசேகரன், லோகநாதன், பத்மநாபன், குமார், தணிகாசலம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நாசர், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர் கள் மத்திய அரசை கண் டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் கலந்து கொண்ட கட்சியினர் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி டி.எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×