என் மலர்
செய்திகள்

சம்பா பயிர் கருகியதால் பெண் விவசாயி மாரடைப்பில் மரணம்
வேதாரண்யம் அருகே சம்பா பயிர் கருகியதால் பெண் விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தலைஞாயிறு:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு அடுத்துள்ள நீர் மூளை கிராமத்தை சேர்ந்தவர் செவந்து. இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி காத்தாயி. 2-வது மனைவி ஜெகதாம்பாள் (65). 3-வது மனைவி ஜானகி.
செவந்துவும் அவரது முதல் மனைவி காத்தாயியும் இறந்து விட்டனர். ஜெகதாம்பாளுக்கு குழந்தை இல்லை. இதனால் ஜானகியின் மகன் ரமேஷ் வீட்டில் தங்கி இருந்தார்.
ஜெகதாம்பாள் தனக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது.
இது பற்றி அவர் புலம்பிக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
டெல்டா மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் இதுவரை தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பெண் விவசாயிகள் அடங்குவர்.
Next Story






