search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்
    X

    ஜெயங்கொண்டம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்

    ஜெயங்கொண்டம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பொன்னாற்று பாசன டெல்ட்டா பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து, ஏக்கர் ஒன்றுக்கு ரு.25 ஆயிரம் இழப்பீடுதொகை கேட்டு பொன்னாற்றுப் பாசன டெல்ட்டா கடை மடை விவசாயிகள் கோடாலி கருப்பூர் கிராமத்தில் உண்ணா விரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் டெல்ட்டா கடைமடை விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தா.பழூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமதுரை, கோடாலிகருப்பூர் சேகர், குப்புசாமி, தியாகராஜன், பன்னீர்செல்வம், அழகேசன், வில்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் உலகநாதன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் இளஞ்செழியன், ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    தா.பழூர் பொன்னாற்று பாசன டெல்ட்டா பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடுதொகை கேட்டும், கொள்ளிடத்தின் குறுக்கே பொன்னாற்று பாசனத்திற்காக 476-7 என்ற இடத்தில் குறுவாடியில் தடுப்பணை அமைக்கவும், சித்தேறி மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை தூர்வாரித்தரவும், தடையில்லா மும்முனை மின் சாரம் விவசாயத்திற்கு அளித்திடவும், விவசாய மின்மோட்டாருக்கு வழங்கப்படும் மின் அளவை கூடுதலாய் வழங்கிடவும், விவசாயத்தையும், மக் களின் குடிநீர் ஆதாரத் தையும் பாதுகாத்திட வாழைக்குறிச்சியில் உள்ள அரசு மணல் குவாரியை உடனே தடைசெய்திடவும், கொள்ளிடத்தின் கரையை வலுப்படுத்தி தார்சாலை அமைத்து தரவும், கோடாலி கருப்பூர் ஏழுகண் மதகின் பாலத்தை நிரந்தர பாலமாக அமைத்திடவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்று வருகிறது.

    இதில் ராமு, ரெங்கநாதன், கண்ணன், மோகன், மனோகரன், இராஜேந்திரன், இளங்குமரன், ஓய்வு காவலர் பாலகிருஷ்ணன், முருகவேல், அருள், சின்னசாமி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×