search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய கும்பல்
    X

    தேனி அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய கும்பல்

    தேனி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கருவேலன்நாயக்கன்பட்டி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் மொக்கை(வயது60) விவசாய கூலிதொழிலாளி. இவரது மகன் அதேபகுதியை சேர்ந்த பாஸ்கரனின் மகளை கேலிசெய்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவு மொக்கை மோட்டார் சைக்கிளில் வந்தபோது பாஸ்கரன், அவரது நண்பர்கள் நந்தா, பாண்டி, குமார் மற்றும் சிலர் சேர்ந்து அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து அக்கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×