என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உத்தமபாளையம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
தேனி:
உத்தமபாளையம் அருகில் உள்ள மேலசிந்தலைச்சேரி நந்தகோபால் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சவுந்தர்யா(21). உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
சுரேஷ் மற்றும் அவரது மனைவி கேரளாவில் வேலை பார்த்து வருவதால் சவுந்தர்யாவை அவரது தாத்தா ரெங்கசாமி பராமரிப்பில் விட்டிருந்தனர்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிசென்ற சவுந்தர்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து ரெங்கசாமி கோம்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
தேனி அருகில் உள்ள பத்தரகாளிகுளம் மேற்கு தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் முனீஸ்வரன்(23). பெரம்பலூரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு கட்டு வதற்காக கொடுத்த பணத்தை முனீஸ்வரன் செலவு செய்துவிட்டார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் கோபித்துக்கொண்டு முனீஸ்வரன் சென்றுவிட்டார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்