என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை திடீர் உயர்வு
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ் பெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.
கடந்த சில வாரங்களாகவே தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. வழக்கமாக சபரிமலை சீசன் தொடங்கும்போது பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு பெரிய அளவில் பூக்கள் விலை உயரவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று பூக்கள் விலை திடீரென உயர்ந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற மல்லிகைப் பூ இன்று ரூ.950 உயர்ந்து ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆனது. இன்று பிச்சிப்பூ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது. அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):-
சம்பங்கி ரூ.100 (20), மஞ்சகேந்தி ரூ.40 (30), அரளி -ரூ.90 (80), ரோஸ் ரூ.90 (80), சிவப்பு கேந்தி ரூ.50 (40), வாடாமல்லி ரூ.20 (15), செவ்வந்தி ரூ.70 (60).
நாளை முகூர்த்த தினம் என்பதாலும், பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாலும் பூக்கள் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்