என் மலர்
செய்திகள்

பவானி அருகே ஆட்டோ மோதி கணவன்-மனைவி படுகாயம்
பவானி:
காஞ்சிகோவில், கவுண்டம்பாளையம், காசிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்லம்மா (வயது 44).
சம்பவத்தன்று செல்வராஜ் வேலை விசயமாக தனது மனைவி செல்லம்மாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பவானி- கல்பாவி கந்தம்பாளையம் பிரிவில் வந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ எதிர்பாராத வகையில் செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜியும், செல்லம்மாவும் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் செல்வராஜ், செல்லம்மா ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






