என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மாநகராட்சி வரிகளை 15-ந் தேதி வரை செலுத்த அனுமதி
Byமாலை மலர்26 Nov 2016 3:04 AM GMT (Updated: 26 Nov 2016 3:04 AM GMT)
சென்னை மாநகராட்சி வரிகளை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் வருகிற 15-ந் தேதி வரை செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசு பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை செலுத்தும் வகையில் கால நீட்டிப்பு செய்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில்வரி உள்பட இதர வரிகளை பொதுமக்கள் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடந்த 12-ந் தேதி முதல் 446 சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உள்பட இதர வரிகளை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் அடுத்த மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த மாதம் 12-ந் தேதி தவிர) வரை செலுத்தும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் சொத்துவரி மற்றும் இதர வரிகளை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை செலுத்தும் வகையில் கால நீட்டிப்பு செய்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில்வரி உள்பட இதர வரிகளை பொதுமக்கள் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடந்த 12-ந் தேதி முதல் 446 சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உள்பட இதர வரிகளை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் அடுத்த மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த மாதம் 12-ந் தேதி தவிர) வரை செலுத்தும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் சொத்துவரி மற்றும் இதர வரிகளை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X