என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே ஒரே கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்கள்
Byமாலை மலர்25 Nov 2016 5:35 PM GMT (Updated: 25 Nov 2016 5:35 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே ஒரே கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்ததால் கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெருமாள் தீயனூர் கிராமத்தில் வெறிநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இந்த கிராமங்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாய்களை இந்த பகுதியில் அப்புறப்படுத்தினால் மட்டுமே நிரந்தரமான தீர்வு காணமுடியும்.
கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது. பொதுமக்களின அச்சத்தை போக்குவதற்கு அதிகாரிகள் விரைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெருமாள் தீயனூர் கிராமத்தில் வெறிநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இந்த கிராமங்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாய்களை இந்த பகுதியில் அப்புறப்படுத்தினால் மட்டுமே நிரந்தரமான தீர்வு காணமுடியும்.
கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது. பொதுமக்களின அச்சத்தை போக்குவதற்கு அதிகாரிகள் விரைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X