என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
ரூ.500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புச் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் தி.மு.க.வினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை:
ரூ.500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புச் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கும் மாநில அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் தி.மு.க.வினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
இந்நிழ்ச்சிக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் என்.குண்டாமணி(எ)செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கிட்டப்பா அங்காடி முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் தொடங்கி மணி கூண்டிலிருந்து கூறைநாடு வரை நீடித்தது. நிகழ்ச்சியில், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எம்.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.ஜெக.வீரபாண்டியன், ஆர்.அருள் செல்வன், குத்தாலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






