என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்
Byமாலை மலர்25 Nov 2016 10:52 AM GMT (Updated: 25 Nov 2016 10:52 AM GMT)
காரைக்குடியில் ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே பள்ளத்தூர் போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது இருவரும் முனுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
தீவிர விசாரணையில் 2 வாலிபர்களும் 2015-ல் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மொபட்டில் சென்றபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்களான தேவகோட்டை கலிகுழியை சேர்ந்த பூமிநாதன் (33), மாத்தூர் செல்லத்துரை (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 7 பவுன் நகையை மீட்டனர். பின்னர் 2 வாலிபர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X