என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் ஆஜராகாத திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
    X

    கொலை வழக்கில் ஆஜராகாத திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

    கொலை வழக்கில் ஆஜராகாத திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரியலூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வேதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். (வயது 35) இவரது மனைவி பிருந்தா (28) கடந்த 2008-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  2013-ம் ஆண்டு பிருந்தா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பிருந்தாவின் பெற்றோர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் தனது மகளை கொலை செய்திருப்பார்கள் என புகார் செய்தனர். புகாரின் பேரில் அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்த போலீஸ் இன்ஸ் பெக்டர் குணசேகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
    ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் தற்போது திருச்சியில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பிடிவாரண்டுடன் விரைந்துள்ளனர்.
    Next Story
    ×