search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் மனைவியுடன் ஜவுளிக்கடை அதிபர் போலீசில் தஞ்சம்
    X

    காதல் மனைவியுடன் ஜவுளிக்கடை அதிபர் போலீசில் தஞ்சம்

    வடமதுரையைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் காதல் மனைவியுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    வடமதுரையைச் சேர்ந்தவர் நந்தகுமார். (வயது 23). ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். அய்யலூர் அருகே வடுகப்பட்டியில் உள்ள உறவினர் மகள் லலிதாவை (23) பெண் கேட்டனர். லலிதா வீட்டில் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். ஆனால் லலிதா நந்தகுமாரை விரும்பினார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இது குறித்து லலிதாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இதனை அறிந்த காதல் ஜோடியினர் வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோரையும் வரவழைத்து பேசினர். பின்னர் காதல் ஜோடியை நந்தகுமாரின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×